Saturday 4th of May 2024 05:16:41 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி நீதிமன்றுக்கருகில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!

கிளிநொச்சி நீதிமன்றுக்கருகில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!


கிளிநொச்சி நீதி மன்றுக்கருகில் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் 18 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக பொலிசாரின் கண்ணில் சிக்காது சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட நிலையில் குறித்த நபரை கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் மது ஒழிப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் மது ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கைதான நபரிடமிருந்து 18 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்பு மற்றும் சாராயமும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE